முள்ளிவாய்க்காலில் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் : இராணுவத்தின் விளக்கம்

Investigation Army Mullaitivu Journalist
By Kanamirtha Dec 01, 2021 11:30 AM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

அண்மையில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உண்மைகள் திரிபு படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள இராணுவத் தலைமையகம் ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் கூறியுள்ளது.

இலங்கை இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

“முல்லைத்தீவைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது படையினர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல் குறித்து இலங்கை இராணுவம் மற்றும் அதன் இராணுவ காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல்களுக்கமைய மேற்படி சம்பவம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களில் அதாவது 2021 நவம்பர் 27ஆம் திகதி அந்த இடத்தில் கடமையாற்றிய 682 படைப்பிரிவு படையினரிடம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பல்வேறு சமூக ஊடக தளங்கள் மற்றும் நாட்டின் சில அச்சு ஊடகங்கள் என்பன இந்த சம்பவம் தொடர்பாகச் சரிபார்க்கப்படாத உறுதிப்படுத்தப்படாத மிகைப்படுத்தப்பட்ட மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டன.

உண்மையில் படை வீரர் ஒருவர் முள்ளிவாய்க்கால் பெயர்ப் பலகையுடன் இணைந்ததாக இராணுவத்தினரை ஏன் படம் பிடிக்கிறீர்கள் என ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வீதியோரத்திலுள்ள பெயர்ப் பலகையைப் படமெடுக்கும் போது அந்த இடத்திலிருந்த இராணுவ வீரர்களால் அவர் 'மிருகத்தனமாக' தாக்கப்பட்டுக் காயப்படுத்தப்பட்டார் என்று கூறும் அளவுக்குப் படப்பிடிப்பிற்கான காட்சிகள் எடுக்கப்பட்டன.

மேலும் அவர்கள் உடனடியாக முல்லைத்தீவு காவல் நிலையத்திற்கு அறிவித்து அந்த நபரை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அன்றைய தினம் (27) காலை அனுமதித்துள்ளனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்குச் சீறல் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதன்மைச் சாட்சியத்தின் பேரில் அந்த இடத்தில் பணியிலிருந்த மூன்று இராணுவ வீரர்களையும் காவல்துறையினர் கைது செய்து மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களைப் பிணையில் விடுவித்தனர்.

இதற்கிடையில் மேற்படி ஊடகவியலாளர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை (28) வெளியிடப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் மருத்துவ - சட்டப் பரிசோதனை அறிக்கை இந்த ஊடகவியலாளர் 'சிராய்ப்பு' மற்றும் 'சிறு காயம்' என்பவற்றுக்கு மட்டுமே சிகிச்சை பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வறிக்கை 'முட்கம்பியால் சுற்றப்பட்ட பனைக் குச்சியால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்' எனச் சர்வதேச விசாரணைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கூற்றுக்கு இது முற்றிலும் மாற்றமாக அமைந்திருந்தது.

சுதந்திரமாகச் செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்ட 'பத்திரிகையாளர்கள்' இதுபோன்ற நடவடிக்கைகளினால் 'பத்திரிகையாளர்கள்' என்றழைக்கப்படுபவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கத் தயாராக உள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஆரோக்கியமான நல்லிணக்கம் மற்றும் நல்ல நல்லெண்ண உணர்வுகளின் சைகைகளின் காரணமாகச் சந்தர்ப்பவாத மற்றும் இனவாத எண்ணம் கொண்ட சக்திகளால் ஏமாற்றப்படாமல் ஒரு நேர்மறையான முறையில் ஈர்க்கக்கூடிய வகையில் வளர்ந்துள்ளனர்.

வடக்கிலும் சரி, வேறு இடங்களிலும் சரி தாம் சேவை செய்யும் அனைத்து இலங்கையர்களின் நலன்களுக்கான உண்மையான மற்றும் முழுமையான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தும் அதே வேளையில் பகுத்தறிவு மற்றும் அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் இதுபோன்ற திரிபு படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் தீங்கிழைக்கும் நிகழ்வுகளை நம்பி ஏமாற வேண்டாம் என இராணுவம் கேட்டுக்கொள்கிறது.

அதற்கு பதிலாக நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திப் பாதையின் புதிய சகாப்தத்தை உருவாக்க ஒன்றாக கைகோர்க்குமாறு இராணுவம் வேண்டுகோள் விடுக்கின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US