உயிர்த்த ஞாயிறு அறிக்கையிடலால் புலனாய்வு ஊடகவியலாளருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Journalists In Sri Lanka
By Independent Writer Oct 11, 2024 11:02 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report
Courtesy: பார்தீபன்

தன்னை கைது செய்ய திட்டமிடப்படுவதாக புலனாய்வு ஊடகவியலாளர் ஒருவர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்துவது குறித்த தனது செய்தி அறிக்கையிடலுடன் இந்த கைது நடவடிக்கை தொடர்புபடுவதாக ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

குற்றவியல் விசாரணை திணைக்களம் தனது ஊடக அறிக்கையிடலானது பொய்யானதாக முத்திரை குத்தி, நடந்துகொண்டிருக்கும் விசாரணைகளுக்கு இடையூறாக இருப்பதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளதாக தரிந்து தனது கடிதத்தில்  சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாயையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாயையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

முகப்புத்தக பதிவு

“உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த கொடூரத் தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான்  நீதிமன்றத்தில் உள்ள ஒரேயொரு முறைப்பாட்டு தொடர்பில் தரிந்து தன்னுடைய முகப்புத்தக தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலைகள் குறித்த விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்துக சில்வா, ஒக்டோபர் 9, 2024 அன்று தனக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்து உத்தரவைக் கோரியுள்ளார்.” என தரிந்து ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளர்.

உயிர்த்த ஞாயிறு அறிக்கையிடலால் புலனாய்வு ஊடகவியலாளருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் | Journalist Arrested For Reporting On Easter Attack

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, யூடியூப் தளமொன்றின் ஊடாக இந்த விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில்,  சமூகத்திற்கு முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய காணொளிகளை தொடர்ச்சியாக வெளியிட்டுள்ளார் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களையும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களையும் தவறாக  வழிநடத்தும் வகையில் தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர்மீது குற்றச்சாட்டுள்ளும் முன்வைக்கப்பட்டள்ளது.

தன்னுடைய அறிக்கையிடலால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான  விசாரணைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிராக உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு குறித்த பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தை கோரியுள்ளதாகவும் தரிந்து ஜயவர்தனவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஊடகவியலாளர் தனது நடவடிக்கையினால் இந்த சம்பவம் தொடர்பான எதிர்கால விசாரணைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தரிந்து ஜயவர்தனவிற்கு எதிராக உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 

இந்தியாவில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து

இந்தியாவில் இரு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து

மேலதிக விசாரணை

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு முன்னேற்றத்தை தெரிவிப்பதற்கு நீதிமன்றத்தை மற்றுமொரு திகதியை வழங்குமாறு பணிவுடன்  கேட்டுக்கொள்கின்றேன்.

இந்துக சில்வா என்ற குறித்த அதிகாரி, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில்இருந்து பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட  அதிகாரி எனவும், 2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களுடனேயே அவர் மீண்டும் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்டார்” என  தரிந்து ஜயவர்தன கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு அறிக்கையிடலால் புலனாய்வு ஊடகவியலாளருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் | Journalist Arrested For Reporting On Easter Attack

மேலும் பொலிஸ் பரிசோதகர் இந்துக சில்வா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான  பல்வேறு தகவல்களை பொலிஸ் மா அதிபருக்கான தன்னுடைய நீண்ட கடிதத்தில்  உள்ளடக்கியுள்ள ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, இந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தன்னை கைது செய்வதை தடுத்து நிறுத்துமாறு கோரியுள்ளார்.

“என்னை கைது செய்யும் சதி முயற்சியை தடுத்து நிறுத்தவும், இந்த சட்டவிரோத விசாரணையை நடத்தும் இந்துக சில்வாவுக்கு எதிராக சட்ட மற்றும் ஒழுக்காற்று  நடவடிக்கைகளை எடுக்கவும், எனது பாதுகாப்பை உறுதி செய்து உத்தரவாதம் அளிக்கவும் தேவையான தலையீடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின்  தலைவர் மற்றும் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான  தேசிய அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கும் குறித்த கடிதத்தின் பிரதி அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா பகிரங்க அறிவிப்பு

இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா பகிரங்க அறிவிப்பு

இந்நிலையில், புலனாய்வு ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவை கைது செய்வதற்கான நகர்வுகள் குறித்து அதன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் சுதந்திர ஊடக இயக்கம், அவரைக் கைது செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் பலமான எதிர்ப்பையும் பொருத்தமான நடவடிக்கையையும் சந்திக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 11 October, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US