தம்பியை கடத்திய பிள்ளையான்: ஊடகவியலாளர் பரபரப்பு வாக்குமூலம்(Video)
பிள்ளையானால் தனது தம்பி காணாமலாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தனக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு ஊடகவியலாளர் தேவபிரதீபன் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (11.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக தான் நீண்ட நாட்கள் தலைமறைவாகி வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார்.
பிள்ளையான் தரப்புடன் இணைந்து தனது தம்பியை செயற்பட கோரி வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததன் காரணமாக தனது தம்பி காணாமலாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
