ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்! - கரு ஜயசூரிய டுவிட்
ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
2015க்கு முந்தைய யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் ஊடகவியலாளர் ஒருவர் பத்தாம் திகதி கடத்தப்பட்டு தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார் என முன்னாள் சபாநாயகர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவருக்காக குரல் எழுப்புவதில் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஐக்கியம் காணப்படாதமை கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக குற்றவாளிகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் முன்னாள் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Resembling the pre-2015 era, a journalist has been abducted, assaulted, and threatened on the 10th. Lack of solidarity in the media industry to stand up for their victimized fellow is worrisome. The culprits must be investigated and punished to restore trust in the authorities.
— Karu Jayasuriya (@KaruOnline) March 14, 2021