ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும் குற்றப்புலனாய்வுத்துறையில் முன்னிலை!
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
ஏற்கனவே அலரிமாளிகை மற்றும் காலிமுகத்திடலுக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இந்தநிலையில், சம்பவங்கள் தொடர்பில் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு, சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் அடங்கியுள்ள 22 பேரில் முன்னாள் அமைச்சர் பெர்னாண்டோவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.