சவூதி அரேபியாவில் 200,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
சவூதி அரேபியா 2023 ஆம் ஆண்டில் 200,000 இலங்கைப் பணியாளர்களை தமது நாட்டுக்கு வரவழைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டுவேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா 2022 இல் இலங்கைக்கு 54,000 வேலை வாய்ப்புகளை வழங்கியதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் பணியாளர்களின் எண்ணிக்கை
அதேநேரம் 2022 இல் 300,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றதாகவும், அதில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வெளிநாட்டுத் பணியாளர்களின் பணம் இலங்கைக்கான வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் 2022இல், இலங்கை புலம்பெயர் பணியாளர்கள் சுமார் 3.8 பில்லியன்
டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக மத்திய வங்கி தரவு காட்டுகின்றது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 59 நிமிடங்கள் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam