சவூதி அரேபியாவில் 200,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
சவூதி அரேபியா 2023 ஆம் ஆண்டில் 200,000 இலங்கைப் பணியாளர்களை தமது நாட்டுக்கு வரவழைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டுவேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா 2022 இல் இலங்கைக்கு 54,000 வேலை வாய்ப்புகளை வழங்கியதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் பணியாளர்களின் எண்ணிக்கை
அதேநேரம் 2022 இல் 300,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றதாகவும், அதில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வெளிநாட்டுத் பணியாளர்களின் பணம் இலங்கைக்கான வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் 2022இல், இலங்கை புலம்பெயர் பணியாளர்கள் சுமார் 3.8 பில்லியன்
டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக மத்திய வங்கி தரவு காட்டுகின்றது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam