சவூதி அரேபியாவில் 200,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
சவூதி அரேபியா 2023 ஆம் ஆண்டில் 200,000 இலங்கைப் பணியாளர்களை தமது நாட்டுக்கு வரவழைக்கத் தயாராக இருப்பதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டுவேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா 2022 இல் இலங்கைக்கு 54,000 வேலை வாய்ப்புகளை வழங்கியதாக அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் பணியாளர்களின் எண்ணிக்கை
அதேநேரம் 2022 இல் 300,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றதாகவும், அதில் பெரும்பாலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வெளிநாட்டுத் பணியாளர்களின் பணம் இலங்கைக்கான வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் 2022இல், இலங்கை புலம்பெயர் பணியாளர்கள் சுமார் 3.8 பில்லியன்
டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக மத்திய வங்கி தரவு காட்டுகின்றது.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam