NIA புலனாய்வு அமைப்பால் கைதான இயேசு சபை அருள்பணியாளர் காலமானார்
மும்பையின் திருக்குடும்ப மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர், இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி திங்கள் கிழமையன்று உயிரிழந்துள்ளார்.
இவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில், மே மாதம் 28ம் திகதி முதல் மும்பையின் திருக்குடும்ப மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
பழங்குடியினர், தலித் மக்கள், மற்றும் வாழ்வின் கடைநிலைக்குத் தள்ளப்பட்டோரின் உரிமைகளுக்காகவும், வாழ்வு மேம்பாட்டிற்காகவும் உழைத்துவந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இராஞ்சியில் பூர்வீகக் குடிமக்களிடையே பணியாற்றிவந்த போது, NIA எனும் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 8ம் திகதி கைது செய்யப்பட்டார்.
அக்டோபர் 9ம் திகதி முதல் மும்பை டலோஜா சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், கடினமான சட்ட போராட்டங்களுக்குப் பின் மே மாதம் 28ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
84 வயதான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, ஜூலை 3ம் திகதி சனிக்கிழமை இரவு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மே மாதம் 28ம் திகதி முதல் 14 நாட்களுக்கு மருத்துமனையில் தங்கி சிகிச்சைப் பெறுவதற்கு அனுமதியளித்த மும்பை உயர்நீதிமன்றம், அருள்பணியாளரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படாததைத் தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை வழங்க ஜூலை 5ம் திகதி வரை கால நீட்டிப்பை வழங்கியது, அந்த கால நீட்டிப்பின் இறுதி நாளில் இறைபதம் சேர்ந்துள்ளார்.
சமூக நடவடிக்கையாளர், அருள்பணி ஸ்டான் சுவாமி. பார்க்கின்சன் என்ற நரம்புத்தளர்ச்சி நோயாலும், செவித்திறன் குறைவாலும், வயது தொடர்புடைய ஏனைய நலப்பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டிருந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், கொரோனா பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருந்தது, மே 29ம் தேதி தெரியவந்தது.
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் அடக்கச் சடங்கு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என இந்திய இயேசு சபை தலைவர், அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் டி சூசா அவர்கள் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
