காணி அபகரிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்திய ஜீவன் தொண்டமான் (Photos)
ஹட்டனில் காணி அபகரிப்பு நடவடிக்கை ஒன்றை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தடுத்து நிறுத்தியுள்ளார்.
ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட காணியை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே ஜீவன் தொண்டமானின் தலையீட்டையடுத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த காணியில் கட்டப்பட்டிருந்த தற்காலிக கட்டடமும் அகற்றப்பட்டுள்ளதுடன் இதன் பின்னர் காணியை ஆக்கிரமிக்க முற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலி பத்திரங்கள்
ஹட்டன் பிளான்டேசனின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மேற்படி காணியை பாடசாலைக்கு வழங்குவதற்கு ஏற்கனவே கொள்கை ரீதியில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த கல்லூரியின் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காணி விடுவிப்புக்கான ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டு விடுவிப்புக்கான நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் இவ்வாறாக குறித்த காணியை இந்த பிரதேசத்தை சேர்ந்த சிலரின் உதவியுடன் போலி பத்திரங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
ஜீவன் தொண்டமான் நடவடிக்கை
எனினும், அப்பகுதியில் கட்டடம் எதுவும் நிர்மாணிக்கப்படாமல் அது கிடப்பில் இருந்ததால் அதனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் தற்காலிக கடையொன்று அமைக்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்ட கடை அகற்றப்பட்டதுடன் பாடசாலைக்கு உரித்தான அந்த காணியை பாடசாலைக்கு சட்டப்பூர்வமாக பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை அமைச்சர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |