வங்கி இயந்திரத்திலிருந்து பணம் திருட முயற்சி செய்த சந்தேகநபர் கைது
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்ராசி நகரில் அமைக்கப்பட்டிருந்த தன்னியக்க பணம் பெறும் (ATM) இயந்திரத்திலிருந்து பணத்தை திருட முயற்சி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (12.12.2023) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இயந்திரம் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கமராக்கள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் பதிவான சில காட்சிகளின் அடிப்படையில் 35 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இயந்திரத்தின் பாதுகாப்பு அறையின் கதவு உடைக்கப்பட்ட போதிலும் எந்தவித பணமும் திருடப்படவில்லை என அக்கரபத்தினை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 50 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
