ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து பேச்சு
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மே 18 முதல் 20 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் குருஜி நுவரெலியா, சீதையம்மன் ஆலயத்துக்கும் வருகை தரவுள்ள நிலையில் குருஜியின் அதிதியாக பெங்களுரூ (Bengaluru) சென்றிருந்த அமைச்சர் அவரை இன்று (11.05.2024) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை
இதன்போது இலங்கையின் தற்போதைய நிலவரம், மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நகர்வுகள் பற்றி குருஜிக்கு அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேபோல பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் பற்றியும் விவரித்துள்ளதோடு மலையக சமூக மாற்றத்தில் இது முக்கிய திருப்பமாக அமையுமென அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வாழும் கலை நிறுவனத்தின் கீழ், பிரஜா சக்தி, தொண்டமான் அறக்கட்டளை போன்றவற்றின் ஊடாக எமது மக்களுக்கு தொழில் பயிற்சி, தொழில் மேம்பாடு மற்றும் புத்தாக்க வாய்ப்புகள் பற்றி ஆராயுமாறு இதன்போது அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் நீர்வளத்துறை பற்றியும் இருவருக்கும் இடையில் கருத்தாடல் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக சமூகத்தைச் சேர்ந்த செல்லையா கோபாலன் என்ற கலைஞர் வரைந்த ஓவியத்தை குருதேவிடம் அமைச்சர் நினைவு பரிசாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri