அனுரவுடன் சந்திப்பை நடத்திய ஜப்பானிய அரசாங்கம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜப்பானிய அரசாங்கம், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஜப்பான் சென்றுள்ள திஸாநாயக்க, ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுகே யோசிஃபுமி (TSUGE Yoshifumi) ஐ இன்று(22) சந்தித்தார்.
நீண்டகால நட்புறவு
தமது கலந்துரையாடலில், இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை, இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அனுரகுமார தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக திஸாநாயக்க கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில், ஜப்பானின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசிய விவகாரங்கள் திணைக்களத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் TSUTSUMI Taro, பிரிவின் பிரதிப் பணிப்பாளர்IWASE Kiichiro மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜப்பானிய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
