யாழ். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ விருப்பம் வெளியிட்டுள்ள ஜப்பானிய நிறுவனம்
யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதில் தனது அமைப்பு கவனம் செலுத்தி வருவதாக நிப்பொன் அறக்கட்டளையின் தலைவர் யோஹெய் சசகாவா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் நிப்பொன் அறக்கட்டளையின் தலைவர் யோஹெய் சசகாவாவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
மாணவர்களின் கல்வி
இந்த சந்திப்பின் போது, யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதில் தனது அமைப்பு குறிப்பாக கவனம் செலுத்துவதாக சசகாவா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொது சுகாதாரம், கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி சமூகத்தின் நலனை மேம்படுத்துவதில் நிப்பொன் அறக்கட்டளை பங்களிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும்,இலங்கையில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை என்பதை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்துரைத்துள்ளார்.
இதற்கிடையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 17 மணி நேரம் முன்
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri