ஜே.வி.பி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள தகவல்!
தற்போது மக்கள் ஜே.வி.பியின் பங்காளிகளாக மாறியுள்ளனர் என்றும் இதனூடாக தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனியார் வானொலி ஒன்றில் ஒலிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மக்கள் பார்வையாளர்களாக இருந்ததன் காரணமாகவே ஜே.வி.பியால் தேர்தல்களில் பாரியளவு வெற்றியைப் பதிவு செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. வெற்றியடைய முடியாது என்பதைத்
தாங்கள் அறிந்திருந்தோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri