இலங்கையில் நடப்பவை இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி:ராஜபக்ச தர அடையாளத்தின் அழிவு தரும் செய்தி
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையில் தற்போது நடக்கும் சம்பவங்களை பார்த்து எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.
2014 முதல் இந்தியாவில் இனவாத வெறி அதிகரித்துள்ளது. இலங்கையைப் போன்று தீவிர தேசியவாதம் மற்றும் மத பெரும்பான்மைவாத பாதையில் செல்கிறது. இவை அனைத்தும் சமூக சகவாழ்வு மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் என மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் ராஜபக்ச என்ற தர அடையாளத்தின் அழிவு ஒரு செய்தியை வழங்கி இருப்பதாக த இந்து பத்திரிகை கூறியுள்ளது.
தீவிர இனவாதம் மற்றும் பெரும்பான்மை வாத அணித்திரட்டல் என்பன நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் ஆதரவாக இருக்காது எனவும் மக்கள் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் போது, இனவாதம் மற்றும் பெரும்பான்மை வாதத்தினால் எந்த பயனும் இருக்காது எனவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
What happened in Sri Lanka should serve as a wake up call. Since 2014, India is being whipped into a communal frenzy & imagined fears. It is treading the same path of hyper nationalism & religious majoritarianism. All at the cost of disrupting social cohesion & economic security. https://t.co/c0WZUHW1DH
— Mehbooba Mufti (@MehboobaMufti) May 11, 2022