சிறைச்சாலை மருத்துவமனையில் தீவிர நெரிசல் நிலை
சிறைச்சாலைகள் மருத்துவமனையின் தற்போதைய திறன் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 350 ஆக உள்ளது.
இது அதன் கொள்ளளவான 185 ஐ விட அதிகம் என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெரிசலை குறைக்க நடவடிக்கை
எனினும் மருத்துவமனையின் திறனை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை
எனவும், நோயாளிகள் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால், மட்டுமே நெரிசல் குறையும்
எனவும் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இடப்பற்றாக்குறை காரணமாக சிறை மருத்துவமனையில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளை தங்க வைக்கும் அவல நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |