யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாள் நினைவு கூரல் (Photos)
யாழ். பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 22ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (17.01.2023) நினைவு கூரப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர்.
இதன் போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
பொங்குதமிழ் பிரகடனம்
இவ்எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கீகரிக்கப்பட வேண்டும் என பொங்குதமிழ் பிரகடனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் : தீபன்