யாழ்.வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் (Video)
ஆலய மகா கும்பாபிஷேகம்
யாழ். வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றுள்ளது.
இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேறிய நிலையில், இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் 28 வருட காலமாக இருந்த கோயிலை விடுக்குமாறு பல தரப்பினரிடமும் ஆலய பக்தர்கள் கோரிக்கைகள் விடுத்து வந்துள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆலய பகுதியினை இராணுவத்தினர் விடுவித்து, தமது உயர்பாதுகாப்பு வலய வேலியினை பின் நகர்த்தியுள்ளனர்.
ஆலய புனர் நிர்மாணம்
இந்த நிலையில் முற்றாக சேதமடைந்த ஆலயத்தினை மீள் நிர்மாணம் செய்வதற்கு ஆலய பரிபாலன முயற்சிகளை முன்னெடுத்து, உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்தோர்களின் நிதி பங்களிப்பு மற்றும் ஆதரவுடன் ஆலயத்தை இராஜ கோபுரத்துடன் புனர் நிர்மாணம் செய்துள்ளனர்.
மேலும் கும்பாபிஷேகத்தின் போது கடும் மழை பொழிந்த போதிலும் பெருமளவான பக்தர்கள்
கலந்து கொண்டு வைரவ பெருமானை வணங்கி அருளாசியினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.






HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam
