யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நூற்றாண்டு விழா
யாழ்ப்பாணம் - கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நிறுவப்பட்டு நூறு வருடங்கள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் கல்லூரி தின விழா இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இன்று (01.10.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் கலந்து சிறப்பித்துள்ளார்.
நூற்றாண்டு விழா
அத்துடன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து நூறு ஆண்டுகளை வெளிப்படுத்தும்
வகையில் நூறு நிறைகுடங்கள் கொடிகள் ஆலவட்டத்துடன் பண்பாட்டு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ரதி லக்ஷ்மி மண்டபத்தில் நூற்றாண்டு விழா ஆரம்பமானதுடன் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்வாக கலாசாலையின் ஓய்வுநிலை பிரதி அதிபரான பண்டிதர் கலாநிதி செ.திருநாவுக்கரசு எழுதிய கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பற்றிய சிறப்பு ஆய்வான "வடக்கின் ஆசிரியர் கலாசாலை" எனும் நூலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூலுக்கான கருத்துரையினை கலாசாலையின் ஓய்வுநிலை விரிவுரையாளரும் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கௌரவ ஆலோசகருமான சரா.புவனேஸ்வரன் நிகழ்த்தினார். கலாசாலை கீதத்துடன் விழா நிறைவுபெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |












தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
