யாழ்ப்பாணத் தமிழ் பெண் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் நோர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஹம்சாயினி குணரத்தினம் என்பவரே இவ்வாறு நாடாளுமன்றிற்கு தெரிவாகியுள்ளார். மூன்று வயதில் ஹம்சாயினி குணரத்தினம் நோர்வேக்கு புலம்பெயர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் திகதி ஹம்சாயினி குணரத்தினம் ஒஸ்லோவின் பிரதி மேயராக நியமிக்கப்பட்டிருந்தார். 2019ம் ஆண்டில் மீளவும் அந்தப் பதவிக்கு தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்சாயினி குணரத்தினம் வெற்றியீட்டியுள்ளார். ஹம்சாயினி குணரத்தினம் வெற்றிக்கு இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Congratulations to @KamzyGunaratnam best wishes from Sri Lanka. https://t.co/IEaMIYUUt5
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) September 14, 2021
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam