யாழில் மிதிவெடிகள் மீட்பு (Photo)
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கரத்தைப் பகுதியில் இருந்து மிதி வெடிகள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
சங்கரத்தை பகுதியில் உள்ள வீடொன்றின் காணியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டபோது சந்தேகத்துக்கிடமாக இரு பொருள்கள் இருப்பதனை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து உரிமையாளர், வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமாகக் காணப்பட்ட பொருள்களை அவதானித்து மிதிவெடிகள் என இனங்கண்டுள்ளனர்.
அதன் பின்னர் மிதிவெடிகளை செயலிழக்கச் செய்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
