யாழில் மிதிவெடிகள் மீட்பு (Photo)
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கரத்தைப் பகுதியில் இருந்து மிதி வெடிகள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
சங்கரத்தை பகுதியில் உள்ள வீடொன்றின் காணியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டபோது சந்தேகத்துக்கிடமாக இரு பொருள்கள் இருப்பதனை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து உரிமையாளர், வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை

பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமாகக் காணப்பட்ட பொருள்களை அவதானித்து மிதிவெடிகள் என இனங்கண்டுள்ளனர்.
அதன் பின்னர் மிதிவெடிகளை செயலிழக்கச் செய்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri