காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் (Video)
யாழ்ப்பாணம் - பொன்னாலை பகுதியில் காணி அபகரிப்புக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொன்னாலை சந்திக்கருகில் இன்று (10.12.2023) காலை இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு
அராலி முதல் பொன்னாலை வரையிலான காணிகளை ஆக்கிரமிப்புச் செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது எமது கடல் எமக்கு வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும், கடலைச்
சுவீகரித்து கடற்தொழிலாளர்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதே, எமது கடலை
சுவீகரிக்க எவருக்கும் அனுமதியில்லை, ரணில் அரசே எமது கடலை சுவீகரித்து
வரலாற்று தவறைச் செய்யாதே, மேச்சல் தரையையும் மயானங்களையும் மாட்டு வண்டி
சவாரித் திடல்களையும் சுவீகரிக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட
பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





