யாழ். மக்கள் சிலிண்டர் சின்னத்தை வெல்ல வைப்பார்கள்: முன்னாள் மாநகர முதல்வர் உறுதி
ஜனாதிபதித் தேர்தலில் எமது யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சிலிண்டர் சின்னத்தை வெல்ல வைப்பார்கள் என்பது உறுதி என்று முன்னாள் யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று (15.09.2024) இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்து நாட்டை மீட்டெடுக்கும் துணிச்சலான தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒருவர்தான். நாட்டை அவர் பொறுப்பேற்ற போது நாடு வங்குரோத்தடைந்திருந்தது. திறைசேரி காலியாக இருந்தது.
வழிபாட்டு சுதந்திரம்
எமது பொருளாதாரத்துக்கு வெளிச்சம் தந்தவர் அவர்தான். எமது யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சிலிண்டர் சின்னத்தை வெல்ல வைப்பார்கள் என்பது உறுதி.
நெருக்கடி நிலையிலும் இலவசமான மண்ணெண்ணெய், படகு, வலை என்பவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தார்.
இதற்கு எமது கட்சியின்
தலைவர் டக்ளஸ் தேவானந்தா முன்னின்று செயற்பட்டார். பல இந்துக் கோயில்கள்
விடுவிக்கப்பட்டுள்ளதோடு அங்கு சென்று வழிபட வழியமைக்கப்பட்டுள்ளது.

ஏனைய மதத்தவர்கள் சுதந்திரமாக தமது மதத்தை வழிபட ஜனாதிபதி வழியமைத்துக் கொடுத்தார்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam