நாகபூசணி அம்மன் சிலை விவகாரம்! யாழ். நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (Video)
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று(18.04.2023) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா, அகில இலங்கை இந்துமா மன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியுள்ளனர்.
குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸாரின் வழக்கீடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி சட்டத்தரணிகள் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை எழுத்து மூல சமர்ப்பணங்களுக்காக வழக்கு எதிர்வரும் (04.05.2023) ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செய்தி-தீபன்
இரண்டாம் இணைப்பு
யாழ். தீவக நுழைவாயிலான பண்ணையில் வைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையினை அகற்ற அனுமதிகோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய தினம் (18.04.2023) யாழ். நீதிமன்றில் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 30ற்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும், சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீகாந்தா மற்றும் திருக்குமரன் ஆகியோரும் பிரசன்னமாகியுள்ளனர்.
இதன்போது யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
செய்தி- தீபன்
முதலாம் இணைப்பு
யாழ். தீவக நுழைவாயிலான பண்ணையில் சித்திரைப் புத்தாண்டு அன்று வைக்கப்பட்ட நாகபூஷணி அம்மன் சிலையை அகற்றுவதற்கு யாழ்ப்பாணப் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
சிலை வைக்கப்பட்டமையால் இன, மத குழப்பம், சமாதானச் சீர்குலைவு ஏற்படக்கூடும் எனவும் சிலைக்கு உரிமை கோராவிடின் அது அகற்றப்படும் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
மேலும் வழக்கு இன்றைய தினம் (18.04.2023) எடுத்துக்கொள்ளப்படும் போது அனைத்து சட்டத்தரணிகளையும்
முன்னிலையாகுமாறும் இந்து அமைப்புகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
