யாழ். நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி போராட்டம்(Video)
யாழ். நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டமானது நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்று (24.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஊடாக நெடுந்தீவு பொலிஸாருக்கு மனுவொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
அந்த மனுவை, நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தால் ஒவ்வொரு சமூகத்திடமும் பொலிஸ் நிலைய சட்டத்தின் ஊடாக விழிப்புக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவின் பொது இடங்கள் இறங்குதுறை மற்றும் மனித நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்கள், சுற்றுலா தளங்கள் அனைத்திற்கும் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படல் வேண்டும்.
நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் வரையறுக்கப்பட்ட நெடுந்தீவு இடங்களை ரோந்துப் பணியினூடாக கண்காணிப்பதற்கு இடைவிடாது ஒவ்வொரு நாளும் பொலிஸ் நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நவீன தொழிநுட்பம்
நெடுந்தீவின் சுற்றுலா தளங்களிற்கு ஒவ்வொரு நாளும் சென்று நெடுந்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கண்காணிக்கப்பட வேண்டும்.
வெளியூர்களில் இருந்து வந்து நெடுந்தீவின் விடுதிகளில் தங்குபவர்கள் விடுதி உரிமையாளர்களால் பூரண ஆள் அடையாளத்திற்கு உட்படுத்தல் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
நெடுந்தீவுக்கு உள்ளே வரும் வெளியே செல்லும் மக்களின் தரவுகளை நவீன தொழிநுட்பத்துடன் கொண்டு பயணிகளை சிரமப்படுத்தாது அதிவிரைவாக தரவுகளை இறங்குதுறையில் வைத்து சேமித்து கொள்ளும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
