யாழ். இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்டோருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
நேற்றைய தினம் (21.02.2023) சாவகச்சேரி கைதடி பகுதியிலுள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இசை நிகழ்ச்சியில் லேசர் கதிரொளிகள், புகைகள் (ஸ்மோக்) போன்றவை அளவுக்கு அதிகமாகப் பாவிக்கப்பட்டமையாலையே நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண் எரிவு, கண் வீக்கம், தொடர்ச்சியாகக் கண்ணீர் வருதல் போன்ற பாதிப்புக்களுக்குள்ளவர்கள் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கைந்து பேர் உள்ளிட்ட சுமார் 50க்கும்
மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
