யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு 13 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு (video)
யாழ் , மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கை யாழ். மேல் நீதிமன்றம் பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ஜனவரி 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால், யாழ் மாநகர சபையின் முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
மனு மீதான விசாரணை
அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்த்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக இமானுவேல் ஆனோல்ட் தொடர்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்குமாறு கோரியும் யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் தொடுத்த மனு மீதான விசாரணை இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போது இரு தரப்புகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கை பெப்ரவரி 13ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளார்.
குறித்த வழக்கில் யாழ் மாநகர முதல்வர் , யாழ் மாநகர ஆணையாளர், சார்பில்
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கே.சயந்தன் ஆகியோரும் மனுதாரர் யாழ் மாநகர சபை
உறுப்பினர் வ.பார்த்தீபன் சார்பில் சட்டத்தரணி கு.குருபரன், வி.மணிவண்ணன்,
வி.திருக்குமரன் ஆகியோரும் முன்னிலைப் படுத்தப்பட்டிருந்தார்கள்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
