யாழில் நண்பியிடம் பெறுமதி மிக்க நகையை இழந்த பெண்ணின் தவறான முடிவு
யாழ்ப்பாணத்தில் நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
பண்டத்தரிப்பு - சில்லாலை பகுதியைச் சேர்ந்த ரொபேட் ராஜ்குமார் ஆன் சுகாசினி (வயது 43) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் சினேகிதி ஒருவர் தனது மகனின் திருமணத்திற்கு செலவழிப்பதற்கு பணம் தேவைப்படுவதால் அடகு வைப்பதற்கு என 25 பவுண் நகையை குறித்த பெண்ணிடம் வாங்கியுள்ளார்.
ஏமாற்றிய நண்பி..
இருப்பினும் அவர் அந்த நகையை திருப்பி கொடுக்காமல் தொடர்ச்சியாக குறித்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினமும் அந்த நகையை நண்பியிடம் கேட்டுள்ளார்.

அவர் அந்த நகையை வழங்க மறுக்க மனவிரக்தியில் நேற்று அதிகாலை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் இளவாலை பொலிஸார் சாட்சிகளை நெறிப்படுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan