யாழ்.நகரில் விற்பனை செய்யப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி!
யாழ்.நகரில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் யாழ். மாநகர சுகாதாரபிரிவினரால் குறித்த சைவ உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை
சேர்ந்த ஒருவர் இன்று காலை உழுந்து வடை ஒன்றினை வாங்கி வீடு சென்று வடையை
சாப்பிட்ட போது வடைக்குள் கரப்பான் பூச்சி இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
உடனடியாக குறித்த நபர் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பரிசோதர்களுக்கு இதனை அறிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் யாழ்ப்பாண மாநகரசபையின் சுகாதார பரிசோதர்கள் உடனடியாக
குறித்த கடைக்கு விஜயம் மேற்கொண்டு கடையினை பரிசோதித்ததோடு கடைக்கு
எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.