பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டி போராட்டத்தில் இறங்கிய வேலையில்லா பட்டதாரிகள்
யாழில் (Jaffna) பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டியவாறு காட்சிபடுத்தி வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று (09.07.2024) காலை வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைள்
அதேவேளை, தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமெனவும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், "பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது, படிப்பிற்கும் போராட்டம் வேலைக்கும் போராடுவதா மற்றும் எல்லோருக்கும் பாரபட்சமின்றி வேலைகளை வழங்க வேண்டும்" என்றவாறான பல கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |















கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
