அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆரம்பமான யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும், மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (28.03.224) வடக்கின் ஆளுநரும் மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான பி.எஸ.எம்.சார்ள்ஸின் பிரசன்னத்துடன் நடைபெற்றுள்ளது.
தீர்வுகள்
யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனின் ஒழுங்குபடுத்தலில் ஆரம்பமான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

மேலும், துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்படவுள்ளன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு துறைசார் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக பதவி நிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri