கடற்றொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற யாழ். ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இன்று(19.06.2026) இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டுள்ளதுடன், யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
விவசாயிகளை வாழ வைப்பதாகக் கூறிவிட்டு இன்று நட்டாற்றில் கைவிட்டுள்ளது அநுர அரசு - சஜித் குற்றச்சாட்டு
இதன்போது, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமை உரையாற்றியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், அர்ச்சுனா இராமநாதன் வடக்கு மாகாண சபையின் பேரவைத் தலைவர், பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், வட மாகாண கடற்படைத் தளபதி, பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.



ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam