வடக்கு மாகாண ஆளுநருடன் யாழ். கட்டளை தளபதி சந்திப்பு
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
முதலாவது சம்பிரதாயபூர்வ சந்திப்பு
யாழ். மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர், ஆளுநருடன் அவர் மேற்கொண்ட முதலாவது சம்பிரதாயபூர்வ சந்திப்பு இதுவாகும்.

இந்த சந்திப்பின் போது, இருவருக்குமிடையே சுமுகமான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
புதிய பதவியைப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் நவரத்னவுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
பாதுகாப்பு நிலவரங்கள்
இந்த சந்திப்பின் நினைவாக ஆளுநருக்கு பாதுகாப்புப்படைகளின் கட்டளைத் தளபதியால் நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் சிவில் நிர்வாகத்துடனான ஒருங்கிணைப்பு குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது என்று அறியமுடிகிறது.





கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam