யாழில் இடம்பெற்ற மோசடி: பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை (video)
யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள மக்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நகைகள், வங்கியில் பணியாற்றும் உத்தியோகத்தர்களால் மோசடி செய்யப்பட்ட நிலையில் அதனை தமக்கு மீளப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ். ஊடக மையத்தில் நேற்று (24.12.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில், ‘’சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் மக்கள் வங்கியில் அடகு வைக்கப்பட்ட எமது நகைகள் குறித்த வாங்கி அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டது.
பொருளாதார பாதிப்பு
இவ்வாறான நிலையில் எமது நகைகள் தற்போது வரை கிடைக்கப் பெறாத நிலையில் நாம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதுடன் பாரிய மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம்.
நகை மோசடியுடன் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சிலர் மீண்டும் வங்கியில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் எமது நகைகளை மீளத் தராமல் இழுத்தடிப்பு செய்வது ஏன்? நாம் வாங்கிக்குச் சென்றால் அங்கிருக்கும் முகாமையாளர் ஏதோ புதிய விடயங்களை கேட்பது போல் எமது ஆதங்கங்களை கேட்கிறார் நான் மேல் இடத்துக்கு அறிவிக்கிறேன் என கூறுவதே தொடர் கதையாக உள்ளது.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம்
மக்கள் வங்கி அரசாங்கத்தின் வங்கி பாதுகாப்பானது எனக் கருதியே எமது அவசர தேவை காரணமாக நகைகளை அடகு வைத்தோம். நாம் அடகு நகைகளை உரிய காலப் பகுதியில் எடுக்காவிட்டால் ஒரு நாள் கூட அவகாசம் தராது நகைகளை ஏலத்தில் விட்டுள்ளனர்.
ஆனால் 10 வருடங்கள் கடந்தும் நாம் அடகு வைத்த நகையை மீளத் தராது நொண்டி காரணங்களை கூறி காலம் கடத்தி வருவதை ஏற்க முடியாது. எமக்கு நாம் வங்கியில் வைத்த நகைகள் வேண்டும், இல்லாவிட்டால் தற்போதைய சந்தை மதிப்பில் பணப் பெறுமதியை தர வேண்டும்.
ஆகவே நாம் ஒன்றை கூறுகிறோம் தொடர்ந்து எம்மை ஏமாற்றலாம் என மக்கள் வங்கி கருதுமானால் வங்கியின் செயற்பாடுகளை முடக்கி பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தயங்க மாட்டோம்’’ என தெரிவித்துள்ளனர்.





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
