யாழ். செம்மணி சந்தியில் விபத்து : இருவர் படுகாயம் (Photos)
யாழ். செம்மணி சந்தியில் இன்று (3) மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாவல்குழியைச் சேர்ந்த 23 மற்றும் 26 வயதுடைய இருவர் மோட்டார் சைக்கிளில் செம்மணி வீதியால் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது அவ்வீதியால் வந்த டிப்பர் அவர்களை மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் டிப்பரின் சாரதியை யாழ். பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.