யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் (Video)
யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் செம்மணி பகுதியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
26ஆவது ஆண்டு நினைவேந்தல்
தமிழ்த் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று(07) இந்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ் தேசியக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை
கடந்த 1996 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
செம்மணி இராணுவ முகாமில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.
இதனை கேள்வியுற்ற குடும்பத்தினரும், உறவினரும் மாணவியை தேடி செம்மணி இராணுவ முகாமிற்கு சென்று விசாரித்துள்ளனர்.
இதன்போது மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது.
அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களும் செம்மணி
பகுதியில் உள்ள வயல் வெளியில் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
