மட்டக்களப்பில் சிக்கிய ஜெக்கெட் - வெளிநாட்டில் தூக்கப்பட்ட பிள்ளையானின் முக்கிய புள்ளிகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முழுமையான அறிக்கை ஜனாதிபதியால் நேற்றையதினம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதனை வெளியிப்படவில்லை.
அதனைதொடர்ந்து வவுணத்தீவு பொலிஸாரின் படுகொலை தொடர்பில் முக்கிய விடயமொன்றை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட இடத்தில் எப்படி ஒரு ஜெக்கெட் வந்தது, இது தொடர்பான விசாரணைகள் கூட தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டு அதனையும் பொலிஸார் பகுப்பாய்வு செய்து வருகின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் விசாரணைகள் மந்த கதியில் நடந்தாலும், பிள்ளையான் விடயத்தில் அரசு நடத்துகின்ற விசாரணையானது மிக தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
எதிர்வரும் நாட்களில் பிள்ளையானின் முக்கிய சகாக்கள் ஒருவர் அல்லது இருவர் இரகசியமாக திடீரென்று கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் பிள்ளையானின் சகாக்களாக கருதப்பட்டு மலேசியாவிலிருந்து நால்வர் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
தனக்கு முன்னால் சென்ற குண்டுதாரி! ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நேரடியாக பார்த்த பெண்ணின் பகிரங்க வாக்குமூலம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan