இலங்கையில் ஹோட்டல் பதிவு செய்த வெளிநாட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கற்பிட்டி பகுதியில் ஹோட்டல் ஒன்றை ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்த இத்தாலிய நாட்டவர் ஒருவரே முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த நபர் ஒன்லைன்மூலம் ஹோட்டல் அறையை ஒதுக்கியுள்ளார்.
அதிர்ச்சி
இந்நிலையில் நேற்றையதினம் அவர் பதிவு செய்த ஹோட்டலுக்கு சென்ற போது, அது ஐந்து வருடத்திற்கு முன்னரே மூட்டப்பட்டுள்ளமை தொடர்பில் அறிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இத்தாலியின் ரோம் நகரில் வசிக்கும் இந்த வெளிநாட்டவர், கடந்த 9 ஆம் திகதி இலங்கைக்கு வந்து நீர்கொழும்பில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் தங்கியுள்ளார்.
முறைப்பாடு
பின்னர் ஒன்லைன் முன்பதிவு முறை மூலம் கற்பிட்டியின் சேதாவாடிய பகுதியில் ஒரு சுற்றுலா ஹோட்டலை முன்பதிவு செய்துள்ளார்.
அதற்கமைய ஹோட்டல் அறைக்கு சென்ற போது தான் மோசடியான நிலையில் ஏமாற்றப்பட்டுள்ளமை குறித்து அறிந்துள்ளார்.
இது குறித்து கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட இத்தாலிய பிரஜை தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
