ஐரோப்பாவில் வாழும் சகோதரி - கொழும்பில் ஒரே குடும்பத்தவர்களால் ஏமாற்றப்பட்ட பெண்
இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாக பெண்ணிடம் 2.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மின்சார சபையில் பணிபுரியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரி மற்றும் சகோதரர் என ஹொரண சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் மற்றும் அவரது 36 வயதுடைய சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
இங்கிரியவைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களுக்கு இத்தாலியில் ஒரு சகோதரி இருப்பதாக கூறி இருவரும் மோசடி செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் முறைப்பாடு செய்த பெண்ணின் நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இத்தாலியில் உள்ள தனது சகோதரி மூலம் முறைப்பாட்டாளருக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்து, இரண்டு சந்தேக நபர்களும் 2025 ஆம் ஆண்டு தங்கள் வங்கிக் கணக்குகளில் 2.3 மில்லியனை வைப்பு செய்ய வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
எனினும், அந்தப் பெண் இத்தாலிக்கு அனுப்பப்படாததாலும், அவ்வாறு செய்யவிடாமல் தடுத்ததாலும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த பின்னர் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றையதினம் மீண்டும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை தலைமை நீதவான் நாலக இளங்கரத்ன உத்தரவிட்டுள்ளார்.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri