திருகோணமலையில் கட்டுப்பணம் செலுத்திய தமிழரசு கட்சி
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்துக்கான கட்டுப்பணம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று(14) மாலை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
இம்முறை தமிழரசுக் கட்சியானது திருகோணமலை மாநகர சபை, மூதூர் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, வெருகல் பிரதேச சபை, கிண்ணியா பிரதேசம், தம்பலகாமம் பிரதேச சபை ஆகிய சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

கடுமையான உழைப்பு
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சண்முகம் குகதாசன், இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கடுமையாக உழைப்பதன் மூலமாக போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri