நாட்டு மக்களுக்கு பொலிஸார் இன்று விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
முழுமையாக பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள 3 நாட்களில் அடையாள அட்டை முறையை பயன்படுத்தி பயணிப்பதற்கு அனுமதி இல்லை என்ற பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு 11 மணி முதல் 17ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் முழுமையான பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அந்த காலப்பகுதியில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த 3 நாட்களும் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் அமுல்படுத்தப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்திய சிகிச்சை பெறுவதற்கு வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கும் மருந்து விநியோகத்திற்கும் முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.