குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!
புதிய கடவுச்சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
சாதாரண மற்றும் ஒரு நாள் சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுக்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகின்றன.
அந்தச் சேவைகளுக்காக முன்கூட்டிய திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்துக் கொண்டு சந்திப்பை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக WWW.immigration.gov.lk என்ற இணையத்தளம் அல்லது 0707 101 060 என்ற தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்த முடியும்.
தொலைபேசி எண்களை பயன்படுத்தினால், அரசு வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை வசதிகள் செய்து தரப்படும்.
மேலும், கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிக்கப்படும் அல்லது கடவுச்சீட்டுகளின் இருப்பு காலாவதியாகிவிடும் என்ற பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri