வாகரையில் மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு
வாகரை - பால்சேனை மற்றும் கதிரவெளி மக்களுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
பிரதேச செயலாளர் சு.ஹரனின் தலைமையில் நடைபெற்ற செயலக காணிக்கிளை உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது முதற் கட்டமாக 100 பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் வாரங்களில் ஏனைய கிராம பிரிவுகளுக்கும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்படும் என பிரதேச செயலாளர் சு.ஹரன் தெரிவித்துள்ளார்.