ஈரான் மீதான பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேலிய களமுனை
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை மையப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் நிறைவுக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் சமீபத்தைய தாக்குதலுக்கு பின்னர் ஜோ பைடனுடன் இடம்பெறும் முதலாவதும் முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலாக இது கருதப்பட்டது.
குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றதுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை தகவல்
மேலும் கலந்துரையாடல் தொடர்பிலான தகவல்கள் விரைவில் வெளியாகும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக இடம்பெற்ற(21.08.2024) இருதரப்பு கலந்துரையாடலில் பங்குபற்றிய கமலா ஹரிஸ் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடி குறித்து இரு தலைவர்களும் விவாதிருப்பார்கள் என வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri