காசாவில் மீண்டும் வான்தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
காசாவில் மீண்டும் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 37 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாசை அடியோடு ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் என்பது இல்லை என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரபா நகரில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்ட நிலையில், சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் வான்தாக்குதல்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நேற்றும் காசாவில் இஸ்ரேல் வான்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதுடன், இந்த தாக்குதல்களில் இதுவரை 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 1 நாள் முன்

viral video: மின்னல் வேகத்தில் ஓடிய Chicken snake ... விரட்டி பிடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! Manithan
