கிடைக்கப்பெற்ற ஒப்புதல் - தொடரவுள்ள தாக்குதல்! நாங்கள் ஓய மாட்டோம்- இஸ்ரேல் அதிரடி
லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான நடவடிக்கை 'நீட்டிக்கப்படும்' என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவிற்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான திட்டங்களுக்கு, அதன் தலைமைத் தளபதி எயல் ஜமீர் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.
எதிரான நடவடிக்கை
"ஹிஸ்புல்லாவிற்கு எதிரான நடவடிக்கை இப்போதுதான் தொடங்கியுள்ளது - ஈரானில் இந்த நடவடிக்கை முடிவடையும்போது, ஹிஸ்புல்லா தனித்து விடப்பட்டு தனிமைப்படுத்தப்படும்," என்று ஜமீர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

"ஹிஸ்புல்லாவிற்கு எதிரான நடவடிக்கை ஒரு நீண்டகால நடவடிக்கையாகும், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம்.
"ஒரு திட்டமிட்ட திட்டத்தின்படி, இலக்கு வைக்கப்பட்ட தரைவழி நடவடிக்கைகளையும் தாக்குதல்களையும் முன்னெடுக்க நாங்கள் இப்போது தயாராகி வருகிறோம்," என்று ஜமீர் மேலும் தெரிவித்துள்ளார்.
எல்லையிலிருந்து அச்சுறுத்தல் அகற்றப்பட்டு, வடக்கு இஸ்ரேல் குடியிருப்பாளர்களுக்கு நீண்டகாலப் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இராணுவத்திற்கு உதவும் நிதி நிறுவனங்கள் ஈரானின் நியாயமான இலக்குகள்! வெளியான இறுதி எச்சரிக்கை
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri