ஐ.நாவின் தங்குமிடத்தை இலக்கு வைத்த இஸ்ரேல்: தாக்குதலில் பலர் பலி
காசாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் வைத்தியசாலைகளின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று 29 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் இராணுவம் காசாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இஸ்ரேல் இராணுவ தாக்குதல்
இந்நிலையில் ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடம் மற்றும் வைத்தியசாலைமீது இஸ்ரேல் இராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா நகருக்கு வடக்கே ஐ.நாவால் நடத்தப்படும் தங்குமிடத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியள்ளது.

இந்த தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் காசா நகரில் உள்ள நாசர் வைத்தியசாலையின் வாயிலில் இன்று நிகழ்த்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேதத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri