வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும்வரை போர் தொடரும் எனவும் அவர் திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் யூதர்களுக்கு எதிராக செயற்பட்ட ஹிட்லரின் நாசிப்படை தளபதிகள், ஈரான் நாட்டு அணுசக்தி விஞ்ஞானிகள், பாலஸ்தீன தலைவர்கள் என பலரை வெளிநாடுகளில் வைத்து மொஸாட் உளவாளிகள் கொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
உடன்படிக்கை தாமதம்
இந்நிலையில் ஹாமாஸ் தலைவர்கள் பலர் கட்டார், லெபனான் போன்ற நாடுகளில் இருந்தபடி இயங்கிவருவதாகவும் அவர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் நேதன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்களுக்கு போர் நிறுத்த உடன்படிக்கை தற்போது நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அதில் தாமதம் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam