வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும்வரை போர் தொடரும் எனவும் அவர் திட்டவட்டமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் யூதர்களுக்கு எதிராக செயற்பட்ட ஹிட்லரின் நாசிப்படை தளபதிகள், ஈரான் நாட்டு அணுசக்தி விஞ்ஞானிகள், பாலஸ்தீன தலைவர்கள் என பலரை வெளிநாடுகளில் வைத்து மொஸாட் உளவாளிகள் கொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
உடன்படிக்கை தாமதம்
இந்நிலையில் ஹாமாஸ் தலைவர்கள் பலர் கட்டார், லெபனான் போன்ற நாடுகளில் இருந்தபடி இயங்கிவருவதாகவும் அவர்களை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் நேதன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்களுக்கு போர் நிறுத்த உடன்படிக்கை தற்போது நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அதில் தாமதம் ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
