ஈரானை மிரள வைத்த அதிரடி நடவடிக்கை! மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன ஆலையை அழித்த இஸ்ரேல்
ஈரானின் மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன ஆலையை இஸ்ரேல் அழித்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
"நாங்கள் ஐ.ஆர்.ஜி.சி-யின் (இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை) பண இயந்திரத்தை முறையாகச் சிதைத்து வருகிறோம்" என்று இஸ்ரேல் பிரதமரின் X கணக்கில் ஒரு பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரசாயன ஆலை
ஒரு தனி அறிக்கையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF), ஈரானின் இரண்டு மிகப்பெரிய பெட்ரோலிய இரசாயன வளாகங்களைத் தாக்கியதாகவும், அதன் பெட்ரோலிய இரசாயன ஏற்றுமதிகளில் 85%-க்கும் அதிகமானவற்றைச் செயலிழக்கச் செய்ததாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், அசலுயே பகுதியில் (Asaluyeh) உள்ள ஒரு தளம், ஈரான் ஆட்சியின் ஏவுகணைத் தொழிலுக்கான முக்கிய கூறுகள் தயாரிக்கும் மையமாக பயன்படுத்தப்பட்டதாக IDF கூறியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஞாயிற்றுக்கிழமை பெஞ்சமின் நெதன்யாகுடன் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.