உச்சக்கட்ட பதற்றம் - இஸ்ரேல் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ஈரான்
ஈரானின் (Iran) இஸ்பஹானில் (Isfahan) உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதட்டம் அதிகரித்து வருகின்றது.
ஈரானின் இஸ்பஹான் (Isfahan) நகரின் வடகிழக்கே ஈரானிய இராணுவ விமான தளத்திற்கு அருகே மூன்று ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தாக்குதல் சம்பவம் குறித்து ஈரானிய தளபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஈரானியர்களைத் தூண்டிவிடுமா இல்லையா
இராணுவ விமான தளத்திலுள்ள சில பொருட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் ஈரானியர்களைத் தூண்டிவிடுமா இல்லையா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, "ஈரானின் பதிலை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறீர்கள்" என்று அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதல், முன்னும் பின்னுமாக அச்சுறுத்தல்களுக்கு இப்போதைக்கு முடிவாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இஸ்ரேலினுடைய ஆணுவாயுத நிலைகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளும் என்று ஈரானினது (Islamic Revolutionary Guard Corps) இன் பிரதான இராணுவத் தளபதி (Brigadier General Ahmad Haghtala) நேற்றைய தினம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
