தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் முழுமையான பொய்!
நாட்டில் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் முழுமையான ஓர் பொய் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் பாரியளவில் வாகனங்கள் சஞ்சரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று முகாமைத்துவத்தில் காணப்படும் குறைபாடுகளினால் மாணவர்கள், சிறிய நடுத்த முயற்சியான்மையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு திட்டமிடலும் இன்றி அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் தனியார் பஸ் தொழில்துறையில் ஈடுபடுவோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ் தொழில் துறைகளில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு நலன்களை வழங்கக்கூடிய இரண்டாண்டு திட்டமொன்றை அரசாங்கம் வகுத்து அமுல்படுத்த வேண்டுமென கெமுனு விஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 19 மணி நேரம் முன்

தங்கமயில் கர்ப்பம்.. சோகத்தில் இருந்த குடும்பத்தின் ரியாக்ஷன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
